மாணவி பலாத்கார வழக்கில் கார் ஓட்டுநர் கைது

77பார்த்தது
மாணவி பலாத்கார வழக்கில் கார் ஓட்டுநர் கைது
திருச்சி: லால்குடியைச் சேர்ந்த 18 வயது மாணவி புள்ளம்பாடி ஐடிஐ விடுதியில் தங்கிப் படித்து வந்தார். சிறுமருதூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சிலம்பரசன் (30) திருமணமானதை மறைத்து அமைச்சரின் கார் ஓட்டுநர் என கூறி மாணவியுடன் பழகி வந்தார். சில மாதங்களுக்கு முன் சிலம்பரசன், மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில், சமயபுரத்தில் தலைமறைவாக இருந்த சிலம்பரசனை போலீசார் தற்போது கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி