10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. லாரி டிரைவர் கைது

81பார்த்தது
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. லாரி டிரைவர் கைது
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தவுட்டுக்குளம் பகுதியில் சாலையோர குழாயில் 10 வயது சிறுமி நேற்று (மே 28) குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் டிப்பர் லாரியில் மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் முருகன் (33) லாரியை நிறுத்தி தண்ணீர் பிடிக்கவந்துள்ளார். பின்னர் குளித்துக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த சிறுமியின் உறவுக்கார பெண் அங்கு வருவதை பார்த்த லாரி டிரைவர் சிறுமியை கடத்திச்செல்ல முயன்றுள்ளார். பின்னர் அவரிடமிருந்து சிறுமியை மீட்ட அந்த பெண், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து லாரி டிரைவர் முருகனை தேடி அடித்து உதைத்து போலீசில் அந்த இளைஞர்கள் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி