10 காவலர்கள் என்னை அடித்தனர்.. சவுக்கு சங்கர்

18121பார்த்தது
10 காவலர்கள் என்னை அடித்தனர்.. சவுக்கு சங்கர்
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடந்த விசாரணையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை, மதுரை அல்லது தஞ்சை சிறைக்கு மாற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டோர் அறையில் தன்னை அடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி