விமான ஊழியரை கடித்த பெண்.. போலீஸ் நடவடிக்கை

லக்னோ விமான நிலையத்தில் பெண் ஒருவர் மும்பை செல்வதற்காக நேற்று (ஜூன் 18) வந்துள்ளார். பின்னர், மாலை 5.25 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் ஏறினார். தொடர்ந்து, விமானத்தில் ஏறிய அந்த பெண் சக பயணிகளிடம் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கும் போது, விமான ஊழியர் ஒருவரை தாக்கி, அவரது கையை கடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி