“தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது” - அண்ணாமலை

75பார்த்தது
“தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது” - அண்ணாமலை
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இந்த கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசுக்கு திறனில்லாத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்த உயிரிழப்பிற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி