புனேவில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுரேந்திர பலேக்கர் என்பவர் குளித்து விட்டு இரும்பு கம்பியாலான கயிற்றில் துண்டு காய வைக்கும்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து, அவரை காப்பாற்ற வந்த அவரின் மனைவி, மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இரவு பெய்த கனமழையால் அண்டை வீட்டு மின்சார ஒயர் அறுந்து, பலேக்கர் வீட்டின் தகர கூரையின் மேல் விழுந்து, மின்சாரம் பாய்ந்தது தெரியாமல் இருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.