பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டிய வாக்காளர்கள்!

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின்போது அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியை ஆய்வு செய்யச் சென்ற பாஜக வேட்பாளர் வாக்காளர்களால் தாக்கப்பட்டார். வாக்குச்சாவடிக்கு வரவேண்டாம் எனக்கூறி கற்கள், கட்டைகளை வீசி அவரை விரட்டியடித்தனர். ஜார்கிராம் நாடாளுமன்றத் தொகுதியின் மொங்லபோடா கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பாஜக வேட்பாளர் பிரநாத் துடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அவருக்கு பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி