திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவான பத்தாம் நாள் நேற்று இரவு மன்மத தகனம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என முழக்கமிட்டவாறு சாமி தரிசனம் செய்தனர்.