உடுமலை அரசு பள்ளி சுற்று சுவர் இடிந்து விழும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திர ரோடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் வட்டார கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையால் மாணவர்கள் விளையாடும் மைதானம் அருகில் உள்ள சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றது. எனவே விபத்துக்கள் ஏற்படும் முன்பு அதை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி