உடுமலை: பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வியப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருத்ரப்ப நகர் பகுதியில் நிசப்தமான சூழலில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். வேம்புடன் இணைந்த அரசன், வில்வம், நாகலிங்கம், வன்னி உள்ளிட்ட 5 தல விருட்சங்களை கொண்ட இந்த கோவிலில் பஞ்சமுக லிங்கேஸ்வரர், விசாலாட்சி அம்மன், சித்தி விநாயகர், ஆஞ்சநேயர், காலபைரவர், நவகிரகங்கள், குழந்தை வேலாயுத சுப்பிரமணியசாமி, ரேணுகாதேவி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். 

புதன் கிரகத்திற்கு அதிபதியான மீனாட்சியம்மன் வாகனமாக பச்சைக்கிளி இன்று சுமார் 5 மணி நேரமாக சிவபெருமானின் பீடத்தில் வந்து அமர்ந்தது. சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடித் திரியும் கிளி சாந்த சொரூபமாய் ஓரிடத்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து சிவபெருமானை தியானித்தது. இந்த தகவல் காட்டு தியாக உடுமலை பகுதியில் பரவியது. கிளி சிவபெருமானிடம் தனது குறைகளை முறையிட்டு வந்ததா? வாழ்வு முடியும் நிலையில் முக்தி கேட்டு வந்ததா? சிவனில் பாதியான உமையாளுக்கு தூதுவனாக வந்ததா? உலக உயிர்கள் இன்புடன் வாழ பிரார்த்திக்க வந்ததா என்பது கடவுளுக்கு தான் தெரியும். எதுவாயினும் கிளி அமர்ந்த நிலை அதிசயம் மிக்கதாக கருதி பொதுமக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

உடுமலையில் பஞ்சமுக லிங்கேஸ்வரர் சன்னதியில் பச்சைக்கிளி 5 மணி நேரத்துக்கு மேலாக சிவன் மேல் அமர்ந்திருந்த நிகழ்வு இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி