ஆசிரியர் தேர்வு க்கான தகுதி சான்றிதழை ஆயுட்கால சான்றிதழாக வழங்கப் சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என கூறப்பட்டு இருந்தது. அதை நிறைவேற்றக்கோரி இன்று இவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இங்கு வந்து எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த பிறகு தான் இங்கிருந்து நகர்வோம் என்றனர். இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து