கெஜ்ரிவால் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

71பார்த்தது
கெஜ்ரிவால் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தனது கைதை எதிர்த்து அவர் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், இதுகுறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி