மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக MLA

சேலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் காலில் விழுந்து எம்எல்ஏ மன்னிப்பு கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பாமக MLA இரா.அருள் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வந்த திமுகவினர் சிலர், அருள் சைக்கிள் வழங்காமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்த இச்சம்பவத்திற்கு தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறி MLA அருள் மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

தொடர்புடைய செய்தி