ஆம்னி பேருந்துகள் இன்று முதல் பயணிகளுடன் சென்னைக்குள் நுழைய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவை மீறி கோயம்பேட்டில் இருந்து புறப்பட ஆம்னி பேருந்துகள் ஆயத்தமாகியுள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மட்டுமே இன்று முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை மீறி பேருந்துகளை இயக்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.