அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கோவில் திருவிழாக்கள், நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறயின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் தினந்தோறும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழிப்புணர்வு குறும்படங்களை சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர்.