ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் உடைந்து சிறுவன் கீழே விழுந்து பலி

7179பார்த்தது
ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் உடைந்து சிறுவன் கீழே விழுந்து பலி
திருச்சி கோட்டை கீழரண்சாலை பூலோகநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருச்சி மாநகராட் தற்காலிக துப்புரவு பணியாள சுரேஷ் மகன் ஜெயவேல் (15). பூலோகநாதா் கோயில் எதிரிலுள்ள மாநகராட்சி தண்ணீா்தொட்டி அமைந்துள்ள கட்டடத்தின் முதல் தளத்தில் (மாநகராட்சி வாா்டு அலுவலகம்) ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் பகுதியில் ஏறிய ஜெயவேல் அங்கு விழுந்து கிடந்த புளியம் பழங்களை எடுக்க முயன்றாா். அப்போது திடீரென ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் உடைந்து சிறுவன் கீழே விழுந்து மயங்கினாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

தொடர்புடைய செய்தி