கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

8581பார்த்தது
கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
திருச்சி பாலக்கரை கூனிக் பஜார் மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வெண்ணிலா (வயது 35). இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். வெண்ணிலா திருச்சி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு அந்த நபருடன் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி