லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின், வேட்புமனு தாக்கல் நேற்று முதல் துவங்கியது. 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். நேற்று முதல் கலெக்டர் அலுவலகத்தில் டி. எஸ். பி. , இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நுாற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து, 100 மீ. , துாரத்தில் இரண்டு இடங்களில் டிவைடர் அமைத்து போலீசார் , வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கலெக்டர் அலுவலகம் வருபவர்களை தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கின்றனர்.