புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்திவைப்பு

91722பார்த்தது
புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்திவைப்பு
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. எனவே இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் காலம் முடிவடைந்ததும் மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.