காட்டு யானை தாக்கி வியாபாரி சாவு

2281பார்த்தது
காட்டு யானை தாக்கி வியாபாரி சாவு
கூடலூர் தாலுகா தேவாலா அருகே மூச்சுக்குன்னு பகுதியை சேர்ந்தவர் அனிபா (வயது 58). இவர் தேவாலா பஜாரில் பழக்கடை நடத்தி வந்தார். நோன்பு காலம் என்பதால் தனது மகனை கடைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து வீட்டில் அனிபா இருந்தார்.

பின்னர் சம்பவதினத்தன்று காலை 9 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவர், வீடு திரும்பவில்லை. மதியம் 2 மணிக்கு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப் போது காட்டுயானை தாக்கி அனிபா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி