இந்த நிலையில் சம்பவத்தன்று இனிய சுதன் மோட்டார் சைக்கிளில் மணத்திட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஞான வினேஷ், இனிய சுதனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் காயமடைந்த இனிய சுதன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானவினேசை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் மணிக்கட்டி பொட்டல் பகுதியில் நின்று கொண்டிருந்த ஞான விக்னேசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.