தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி, இளைஞர்களின் வருங்கால நம்பிக்கை என வலம் வரும் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் இன்று (ஜூன் 22) தனது 50வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ள விஜய் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தொண்டர்கள் உதவிகள் மற்றும் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர்.