எலுமிச்சை விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

52பார்த்தது
எலுமிச்சை விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் எலுமிச்சை தர்மபுரி மாவட்டத்தின் தேவைக்கு போக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.80க்கு விற்பனையான நிலையில் படிப்படியாக அதிகரித்து கடந்த 1ஆம் தேதி ரூ.100க்கும், இன்று ஜூன் 22 காலை உழவர் சந்தையில் 1 கிலோ எலுமிச்சை ரூ.145-க்கும் விற்கப்படுகிறது. திடீர் விலை உயர்வால் எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி