தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் வந்து பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை குறித்த மனுக்களை போட்டு செல்லலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி இன்று காலை பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை புகார் பெட்டியில் போட்டு சென்றனர். இதைப்போல் ஈரோடு எஸ் பி அலுவலகத்திலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து