பெண்ணுடன் கள்ளக்காதல்.. கணவர் அடித்துக் கொலை!

காஞ்சிபுரம்: ஒரகடம் அடுத்த, பனையூரைச் சேர்ந்தவர் மேஸ்திரி ரவி (40). மனைவி மணிமேகலை (35). இவர் தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக உள்ளார். ரவியும், ஒரகடத்தில் பானிபூரி கடை நடத்தி வரும் திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரும் நண்பர்கள். இதனால், மணிகண்டன், ரவி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற போது, மணிமேகலையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியதுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதையறிந்த ரவி, மணிகண்டனை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ரவி, மணிகண்டன் கடைக்கு சென்று, மனைவியுடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என கண்டித்துள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மணிகண்டனுக்கு ஆதரவாக, அவரது தம்பி கோபியும் வந்து, அங்கு கிடந்த கட்டையால் ரவியை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, மணிகண்டன், கோபி ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி