தமிழகத்தை பொறுத்த அளவில் பாசிச பாரதிய ஜனதா கட்சி ஒன்றே சாமானிய மக்களின் ஒரே எதிரி என்கிற நிலைப்பாட்டில் நாங்கள் இருப்பதால் புதுச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு தீவிரமாக ஆதரவளித்து தேர்தல் பணியாற்றுவது என்கிற முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் தொகுதி மக்களுக்கு தேவையான விஷயங்களை எம்பி என்கிற நிலையில் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் தேசிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் சக்தி மிகுந்த ஒரே தலைவராக திருமாவளவன் இருப்பதால் அவருக்கு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திறந்த மனதுடன் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.