துறையூர் வாகன சோதனையில் 300 அதிமுக துண்டுகள் பறிமுதல்

3308பார்த்தது
துறையூர் அருகே 300 அதிமுக கட்சி துண்டுகள் பறிமுதல், பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்டனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளையராஜா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது முசிறியில் இருந்து துறையூர் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்த போது அதில் ஆவணங்கள் இன்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்த 300 அதிமுக கட்சி துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகன ஓட்டுநர் பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாலும் அதிமுகவில் எந்த ஒரு பொறுப்பும் இல்லை என்பதாலும் அவர் வைத்திருந்த துண்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு துறையூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. துறையூர் பகுதியில் முதன்முறையாக அதிமுக கட்சி துண்டுகள் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி