கர்ப்பிணிகளுக்கு ரூ.14000.. அமலுக்கு வரும் மாற்றம்

578பார்த்தது
கர்ப்பிணிகளுக்கு ரூ.14000.. அமலுக்கு வரும் மாற்றம்
கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்ப்பில் நிதியுதவி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு மகப்பேறு காலம் தொடங்கி குழந்தை பிறந்த பின்னர் வரை தவணை முறையில் ரூ.14,000 பணமும், ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த தவணை முறை திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்ட நிதியுதவி இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி, கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9 வது மாதத்தில் ரூ.2000 என வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி