அதிமுக எம்எல்ஏவுக்கு சிக்கல் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

570பார்த்தது
அதிமுக எம்எல்ஏவுக்கு சிக்கல் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக சார்பில் செங்குட்டுவனும், அதிமுக சார்பில் அசோக்குமாரும் போட்டியிட்டனர். இதில், அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அசோக்குமாரை வெற்றி பெறச்செய்ய 605 தபால் வாக்குகளை செல்லாது என தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார் என குற்றம்சாட்டியுள்ளார். இதன் விசாரணையில், நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி