கள்ளக்காதலனை பெண்களுடன் பழகவிட்டு பணம் பறித்த பெண்

சென்னை ஆவடியை சேர்ந்த சிவக்குமார் (33) தனது தோழி நித்யா (33) என்பவருடன் திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஜிம்மிற்கு ஆவடியை சேர்ந்த 35 வயது பெண் உடல் எடையை குறைக்க வந்துள்ளார். அவருக்கும் சிவகுமாருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை நித்யா வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த 35 வயது பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், சிவக்குமார், நித்யா ஆகிய இருவருமே கள்ளக்காதலர்கள் எனவும், திட்டமிட்டு இவ்வாறு அப்பெண்ணிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி