தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும், சுஷ்மிதா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு, சுஷ்மிதாவின் தாய் சாமந்தி எதிர்ப்பு தெரிவித்து, அவர்களது காதலை பிரித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமார், சுஷ்மிதா வீட்டிற்குச் சென்று, அவரது தாய் சாமந்தியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றார். அவரை தடுத்த அருகில் இருந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.