கேரள மாநிலம் மூணாறு கேப் ரோட்டில் கார் கதவில் அமர்ந்துகொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை பின்பற்றாமல் அதிவேகமாக சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அவர்கள் மலைப்பாதையின் ஆபத்தான வளைவுகளில் கார் கதவில் அமர்ந்து கொண்டு பயணம் செய்வதை பார்க்கும் பொழுது நெஞ்சம் பதைபதைக்க வைக்கிறது.