"சார்ஜ்" செய்யும்போது செல்போன் பயன்படுத்தாதீங்க

52பார்த்தது
"சார்ஜ்" செய்யும்போது செல்போன் பயன்படுத்தாதீங்க
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத்துறை சார்பில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி (இன்று) வரை தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டுக்கு பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது. சுவிட்சை ஆப் செய்த பிறகே பிளக்கினை சொருகவோ, எடுக்கவோ வேண்டும். ஒரே சாக்கெட்டில் அதிக சாதனங்களை சொருகுவதின் மூலமாக மின்சுமை ஏற்றுவதை தவிர்க்கவும். சார்ஜ் செய்யும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.