மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

56பார்த்தது
மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த வடிவேல், சத்யா (24) தம்பதி 3 சக்கர ஐஸ்கிரீம் வண்டி வைத்து பிழைப்பு நடத்திவருகின்றனர். இந்நிலையில், சத்யா இன்று (செப் 28) அதில் ஒரு வாகனத்தின் ஃப்ரீஸருக்கு மின் இணைப்பு கொடுக்க ஸ்விட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி