சேலம் நியூ திருச்சி மெயின் ரோடு லைன்மேட் சேர்ந்தவர் சையத் சபீ. இவரது மகன் முபராக் (22). இவர் தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் அக்பர் அலியின் மகள் ஷாஜினியை (21) பத்து நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முட்புதர் ஒன்றில் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த முபாரக் மனைவியின் அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் 2 லச்சம் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜினியின் உறவினர்கள் அவரை கொலை செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.