பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரா அரசு முடிவு செய்து இருப்பதற்கு எதிராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் 22வது தடுப்பணை அமைப்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி அளித்து அதற்கு ரூ. 215 கோடி நிதியும் அறிவித்து உள்ளார். கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஏற்புடையது அல்ல. ஒரு நதி உருவாகும் இடமும் அது முடிவடைகிற இடமும் சம மதிப்புடையது ஆகும் என தெரிவித்துள்ளார்.