ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷகூர் கான், இவரது மனைவி ரஹ்மத் (வயது 28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஷகூர் கான் குடும்பத்திற்கு வரும் ரேஷன் பொருட்களை அதே பகுதியில் வசிக்கும் தனது தாய் தந்தைக்கு கொடுக்கும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஹ்மத் தனது குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.