உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், 45 வயதான கீதா தேவி சிங் என்பவரை அவரது தம்பி ரவி சிங் (38) கொலை செய்துள்ளார். கீதாவின் 19 வயது மகனுடன், ரவியின் மனைவி ரோஷினி (34) வீட்டை விட்டு ஓடியுள்ளார். இருவருக்கும் ஏற்கனவே உடல் ரீதியான உறவு இருந்த நிலையில், சமீபத்தில் இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதில் ஆத்திரமடைந்த ரவி தனது அக்கா கீதாவை கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்து, உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசியிருக்கிறார்.