உ.பி: ஆக்ராவைச் சேர்ந்த TCS மேலாளர் மானவ் சர்மா, மனைவியின் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவி நிகிதா சர்மா வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "திருமணத்திற்கு முன்பு நான் என் காதலன் அபிஷேக் என்பவருடன் உடல்ரீதியான தொடர்பில் இருந்தேன். அச்சத்தால் இதை என் கணவரிடம் சொல்லவில்லை. ஆனால், திருமணத்திற்குப் பிறகு, நான் எந்தவொரு ஆணுடனும் தொடர்பில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.