CT2025: நியூசிலாந்து அணிக்கு 250 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 79, பாண்ட்யா 45 மற்றும் அக்ஷர் 42 ரன்கள் குவிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்தது.