"திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு?" மதுரை எம்.பி கேள்வி

71பார்த்தது
"திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு?" மதுரை எம்.பி கேள்வி
“ஒடிசாவில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி ஜெகன்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார். ஆலயத்தின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்கிற ரீதியில் தமிழ்நாட்டு மக்களை அவமரியாதை செய்த மோடி, தற்போது திருடர்களின் நிலத்தில் எதற்காக தியானம் செய்ய வந்துள்ளார்? பகவான் ஜெகன்நாதரே உங்களின் பக்தர் என பாஜகவினர் கூறி வரும் நிலையில், பரமஹம்சரின் எளிய சீடரான விவேகானந்தரை உங்கள் விசுவாசிகள் என்ன சொல்லப் போகிறார்களோ? என்கிற பதட்டத்தில் தேசம் இருக்கிறது” என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி