வெப்ப அலையால் 10 பேர் உயிரிழப்பு

77பார்த்தது
வெப்ப அலையால் 10 பேர் உயிரிழப்பு
வட மாநிலங்களில் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. அந்த வெயிலின் தாக்கத்தால் ஒடிசாவில் நேற்று (மே 30) 10 பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நிகழ்ந்ததாக ரூர்கேலா அரசு மருத்துவமனையின் பொறுப்பு இயக்குநர் சுதாராணி பிரதான் தெரிவித்தார். இறந்தவரின் உடல் வெப்பநிலை தோராயமாக 103-104 டிகிரி பாரன்ஹீட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலை நீடித்தால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி