போதை மருத்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்..

67பார்த்தது
போதை மருத்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்..
டெல்லியில் இ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் 25 வயது இளம்பெண்ணிற்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு, பெண்ணை அடித்து அவர் அணிந்திருந்த தங்க செயினை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ரத்தக் காயங்களுடன் இருந்த பெண்ணை மீட்டனர். தொடர்ந்து, குற்றச் செயலில் ஈடுபட்ட இ-ரிக்ஷா ஓட்டுநர் உமர் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.