புத்தர் தனது 29 வது வயதில் மனைவி யசோதராவையும் மகன் ராகுலையும் பிரிந்து சென்றார். பல வருட தவத்திற்கு பிறகு போதி மரத்தடியில் ஞானமடைந்தார். ஞானமடைந்தபின் தன் மனைவியை சந்திக்க விரும்பினார். ஏனெனில் தான் ஞான நிலையை அடைந்ததற்கு அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதை சொல்ல விரும்பினார். சந்திப்பின் போது யசோதாரா புத்தரை உற்றுநோக்கினார். தலையைச் சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது. தனது பழைய கணவர் புதியவருக்குள் மறைந்துவிட்டார் என்பதை உணர்ந்து, புத்தரின் காலில் விழுந்து தன்னை சீடராக ஏற்கும்படி வேண்டினார்.