இடி மற்றும் மின்னலின் போது செய்யக்கூடாதவை

55பார்த்தது
இடி மற்றும் மின்னலின் போது செய்யக்கூடாதவை
* திறந்தவெளியில் உள்ளபோது தரையில்‌ படுத்த நிலையில்‌ இருக்கக்கூடாது, இது இடி தாக்கும்‌ வாய்ப்பை அதிகரிக்கும்‌.
* மிதிவண்டி, மோட்டார்‌ சைக்கிள்‌ போன்ற மின்னலை ஈர்க்கும்‌ வாகனங்களிலிருந்து இறங்‌கிவிடவும்‌.
* மரத்தடியில்‌, குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில்‌ ஒதுங்கக் கூடாது. ஏனெனில்‌, மரங்கள்‌ மின்சாரத்தை கடத்தக்கூடியவை.
* குளிப்பது, பாத்திரம்‌ கழுவுவது போன்ற தண்ணீர்‌ புழங்கும்‌ வேலைகளை செய்யாதீர்கள்‌, ஏனெனில்‌ மின்னல்‌ வீட்டில்‌ உள்ள குழாய்‌ போன்ற உலோக இணைப்புகள்‌ வழியாக பாய்ந்து செல்லக்கூடியது.

தொடர்புடைய செய்தி