“ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?” - சீமான் கேள்வி

76பார்த்தது
“ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?” - சீமான் கேள்வி
கள்ளச்சாராய விவகாரம் குறித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை அளிக்க உள்ளது?. இது விபத்தோ, தற்செயலான உயிரிழப்புகளோ அல்ல; அரசின் அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள படுகொலைகள். அதற்கு அதிகாரிகளை மட்டும் பலியாடாக்கி ஆட்சியாளர்கள் தப்பிக்க முயல்வது பெருங்கொடுமையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி