கொரோனா வைரஸ் (கோவிட்) தொற்று ஏற்பட்ட சில வாரங்களில் பெரும்பாலோர் நலம்பெற்று விடுவார்கள். ஆனால், சிலருக்கு நான்கு முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்குப் பிறகும் கூட நோயின் தாக்கம் இருக்கும். இது ’லாங் கோவிட்’ எனப்படுகிறது. குறிப்பாக, லேசான - மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்கள், லாங் கோவிட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. சரியான சிகிச்சைகள், ஓய்வு, உடற்பயிற்சியில் கவனம் போன்றவற்றை பின்பற்றினால் இதிலிருந்து விடுபடலாம்.