மகளிர் உரிமை தொகை அளிக்க தடை இல்லை

33238பார்த்தது
மகளிர் உரிமை தொகை அளிக்க தடை இல்லை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை என்று கூறியுள்ளார். திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி