தவெக மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் மயக்கம்!

80பார்த்தது
தவெக மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் மயக்கம்!
தவெக மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் மயக்கமடைந்து வருகின்றனர். இன்று (அக் 27) நடக்கும் தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ள நிலையில் காலை முதலே கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் காத்திருக்கின்றனர். தற்போதே மாநாட்டு திடல் பாதி நிறைந்த நிலையில், மேலும் தொண்டர்கள் கூட்டம் சாரைசாரையாக மாநாடு நடக்கும் வி.சாலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 ஆம்புலன்ஸ்கள் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி