விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் அழகுமணி இவரும் இவருடைய நண்பர் மணிமாறன் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நரிக்குடியில் இருந்து திருச்சுழி சாலையில் சென்று கொண்டிருந்தபோழுது இவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது டாட்டா ஏசி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் அழகுமணி மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் டாட்டா ஏசியை ஓட்டிவந்த பாலமுருகன் மீது திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.